செல்போன் மிஸ்ஸிங்கா? கவலை வேண்டாம்
செல்போன் என்பது தற்போது ஒரு மினி கணினியாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் முதல் கோப்புகள் வரை அனைத்து விதமான தரவுகளையும் நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.
அப்பேர்ப்பட்ட செல்பேசி தொலைந்து போய் விட்டால் அத்தனைத் தரவுகளும், முக்கிய முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாடிக்கையாளர்கள் தற்போது திரும்பப் பெற்று விட முடியும்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆன் மொபைல் குளோபல் என்ற நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அதாவது தொலைந்த தரவுகளை மீட்டெடுக்கும் சேவைகளுக்காக இந்த ஒப்பந்தத்தை தன் வாடிக்கையாளர்களுக்காக பார்தி ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
முதலில் இந்த சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த வசதி ஜாவா உள்ள உயர் தொழில்நுட்ப செல்பேசி சாதனங்களில் மட்டுமே சாத்தியம்.
